தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளிவைப்பு . தேதி பின்னர் அறிவிக்கப்படும் .

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு – இணைப்பு இங்கே – http://trb.tn.nic.in/TET_2022/Press%20news_post.pdf

குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

மு.வ உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

இந்திய இரயில்வே – மண்டலங்கள் மற்றும் கோட்டத் தலைமையகங்கள்

Image Source : Wikimedia

இந்திய இரயில்வே  மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை மேலும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன, ஒவ்வொன்றும் ஒரு கோட்டத் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) தலைமை தாங்குகிறார், அவர் மண்டலத்தின் பொது மேலாளருக்கு (GM) அறிக்கை செய்கிறார்.

1. வடக்கு இரயில்வே (Northern Railway)
வடக்கு இரயில்வேயின் மண்டல தலைமையக அலுவலகம் புது தில்லியில் உள்ள பரோடா ஹவுஸில் உள்ளது மற்றும் வடக்கு இரயில்வேயில் அமைந்துள்ள கோட்டத் தலைமையகங்கள்

– டெல்லி
– அம்பாலா
– ஃபிரோஸ்பூர்
– லக்னோ NR
– மொராதாபாத்

2. வட கிழக்கு இரயில்வே (North Eastern Railway)
வட கிழக்கு இரயில்வேயின் மண்டல தலைமையக அலுவலகம் உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ளது மற்றும் வட கிழக்கு இரயில்வேயில் அமைந்துள்ள கோட்டத் தலைமையகங்கள்

– இசத்நகர்
– லக்னோ NER
– வாரணாசி

3. வடகிழக்கு எல்லை இரயில்வே (Northeastern Frontier Railway)
இதன் தலைமையகம் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ளது மற்றும் இங்கு அமைந்துள்ள கோட்டத் தலைமையகங்கள்

– கதிஹார்
– அலிபுர்துார்
– லும்டிங்
– ரங்கியா
– டின்சுகியா

4. கிழக்கு இரயில்வே (Eastern Railway)
கிழக்கு இரயில்வேயின் மண்டல தலைமையகம் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஃபேர்லி பிளேஸில் உள்ளது மற்றும் நான்கு கோட்டத் தலைமையகங்கள் உள்ளடக்கியது:

– ஹவுரா
– சீல்டா
– அசன்சோல்
– மால்டா

5. தென் கிழக்கு இரயில்வே (South Eastern Railway)
இதன் தலைமையகம் கார்டன் ரீச், கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது . இதன் நான்கு கோட்டத் தலைமையங்கள்,

– அட்ரா
– சக்ரதர்பூர்
– காரக்பூர்
– ராஞ்சி

6. தென் மத்திய இரயில்வே (South Central Railway)
இதன் தலைமையகம் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ளது மற்றும் ஆறு கோட்டத் தலைமையங்கள் கொண்டுள்ளது:

– குண்டக்கல்
– குண்டூர்
– நாந்தேட்
– செகந்திராபாத்
– ஹைதராபாத்
– விஜயவாடா

7. தெற்கு இரயில்வே (Southern Railway)
தெற்கு ரயில்வே தமிழத்தின் MGR சென்னை சென்ட்ரலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆறு கோட்டத் தலைமையங்கள் கொண்டுள்ளது:

– சென்னை
– மதுரை
– பால்காட்
– திருச்சி
– திருவனந்தபுரம்

8. மத்திய இரயில்வே (Central Railway)
இதன் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் உள்ளது. இது ஐந்து கோட்டத் தலைமையங்கள் கொண்டுள்ளது:

– மும்பை
– நாக்பூர்
– புசாவல்
– புனே
– ஷோலாப்பூர்

9. மேற்கு இரயில்வே (Western Railway)
இதன் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சர்ச்கேட்டில் உள்ளது. இது ஆறு கோட்டத் தலைமையங்கள் கொண்டுள்ளது:

– வதோதரா
– அகமதாபாத்
– ராஜ்கோட்
– பாவ்நகர்
– ரத்லம்
– மும்பை WR

10. தென் மேற்கு இரயில்வே (South Western Railway)
இது கர்நாடக மாநிலம் ஹூப்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு மூன்று கோட்டத் தலைமையங்கள் கொண்டுள்ளது:

– பெங்களூர்
– மைசூர்
– ஹூப்ளி

11. வட மேற்கு இரயில்வே (North Western Railway)
இதன் தலைமையகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளது மற்றும் நான்கு கோட்டத் தலைமையங்களை உள்ளடக்கியது:

– ஜெய்ப்பூர்
– அஜ்மீர்
– பிகானர்
– ஜோத்பூர்

12. மேற்கு மத்திய இரயில்வே (West Central Railway)
இதன் தலைமையகம் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ளது மற்றும் மூன்று கோட்டத் தலைமையங்களை கொண்டுள்ளது:

– ஜபல்பூர்
– போபால்
– கோட்டா

13. வட மத்திய ரயில்வே (North Central Railway)
இதன் தலைமையகம் உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில்(அண்மையில் பிராக்யராஜ் என பெயர் மாற்றம் பெற்றது ) உள்ளது மற்றும் மூன்று கோட்டத் தலைமையங்களை கொண்டுள்ளது:

– அலகாபாத்
– ஜான்சி
– ஆக்ரா

14. தென் கிழக்கு மத்திய இரயில்வே (South Eastern Central Railway)
இதன் தலைமையகம் சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ளது மற்றும் மூன்று கோட்டத் தலைமையங்களை உள்ளடக்கியது:

– பிலாஸ்பூர்
– நாக்பூர்
– ராய்பூர்

15. கிழக்கு கடற்கரை இரயில்வே (East Coast Railway)
இதன் தலைமையகம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ளது மற்றும் மூன்று கோட்டத் தலைமையங்களை உள்ளடக்கியது:

– குர்தா சாலை
– வால்டேர்
– சம்பல்பூர்

16. கிழக்கு மத்திய இரயில்வே (East Central Railway)
இதன் தலைமையகம் பீகார் மாநிலம் ஹாஜிபூரில் உள்ளது மற்றும் ஐந்து கோட்டத் தலைமையங்களை கொண்டுள்ளது:

– சோன்பூர்
– சமஸ்திபூர்
– தானாபூர்
– முகல்சராய்
– தன்பா

Related Articles

Related

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளிவைப்பு . தேதி பின்னர் அறிவிக்கப்படும் . ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - இணைப்பு இங்கே -...

read more

குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்மு.வ உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும்...

read more

இந்திய இரயில்வே – மண்டலங்கள் மற்றும் கோட்டத் தலைமையகங்கள்

Image Source : Wikimediaஇந்திய இரயில்வே  மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை மேலும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன, ஒவ்வொன்றும் ஒரு கோட்டத் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) தலைமை தாங்குகிறார், அவர் மண்டலத்தின் பொது...

read more

இரயில் நிலைய பெயர்ப்பலகையில் MSL என்பது என்ன?

இரயில் நிலைய பெயர்ப்பலகையில் MSL என்பது என்ன?

நம்மில் பெரும்பாலோர் இரயில்களில் பயணம் செய்கிறோம், பயணிகளுக்கு உதவுவதற்காக நிலையத்தின் இரு முனைகளிலும் பெயர்பலகைகளில் நிலையத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் இரயில் நிலையத்தின் பெயர்களுக்கு அடியில் வெள்ளை நிற பின்புறத்தில் சிவப்பு நிற எழுத்துக்களில் MSL என குறிப்பிட்டு சில எண்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதை கணித்தது உண்டா ?என்ன அது? எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

MSL என்பது Mean Sea Level என்பதை குறிக்கும்.அதாவது அந்த ரயில் நிலையம் சராசரி கடல் மட்டத்திலிருந்து எவ்வுளவ்வு உயரத்தில் உள்ளது என்பதை குறிக்கிறது.

சராசரி கடல் மட்டம் (MSL) என அழைக்கப்படும் கடல் மட்டத்திற்கு மேலே உள்ள நிலையத்தின் உயரத்தை முக்கியமாக எழுதுவதற்கான காரணம் இரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் இரயில்களை சீராக இயக்குவதற்காகவும் பயன்படுகிறது

MSL ஆனது ரயில் ஓட்டுநர்கள் மற்றும் காவலர்களுக்கு அவர்கள் பயணிக்கும் உயரத்தைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது. இது ரயில் ஓட்டுநர்களுக்கு ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, குறிப்பாக அதிக உயரத்தை நோக்கி நகரும் போது.

ரயில் அதிக உயரத்தை நோக்கி நகர்ந்தால், ரயில்களின் சீரான இயக்கத்திற்காக ரயிலின் ஓட்டுனர்கள் அதன் என்ஜின்களுக்கு அதிக சக்தியை வழங்குகிறார்கள்.

நமக்கு அருகில் உள்ள திருத்தணி இரயில் நிலையம் சுமார் கடல் மட்ட உயரத்திலிருந்து 85 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அளவு நாம் திருத்தணியிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கும்போது சில இடங்களில் நிலப்பரப்பின் அமைப்பை பொறுத்து அதிகரிக்கவும் சென்னைக்கு அருகில் குறைந்தும் காணப்படும் . காரணம், நாம் கடற்கரையை நோக்கி செல்லும்போது நம் நிலப்பரப்பின் படி கடல்மட்ட உயரம் குறைந்து கொண்டே செல்லும்.

இனி அடுத்த இரயில் பயணத்தின்போது ஒவ்வொரு இரயில் நிலையத்தின் கடல் மட்ட உயரத்தினை கவனிக்கவும்.

Related Articles

Related

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளிவைப்பு . தேதி பின்னர் அறிவிக்கப்படும் . ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - இணைப்பு இங்கே -...

read more

குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்மு.வ உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும்...

read more

இந்திய இரயில்வே – மண்டலங்கள் மற்றும் கோட்டத் தலைமையகங்கள்

Image Source : Wikimediaஇந்திய இரயில்வே  மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை மேலும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன, ஒவ்வொன்றும் ஒரு கோட்டத் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) தலைமை தாங்குகிறார், அவர் மண்டலத்தின் பொது...

read more

குறள் 190

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு

மு.வ உரை:
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?